காயங்களுடன் வீட்டில் சடலமாக கிடந்த 90 வயது மூதாட்டி - திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0 434

திருப்பத்தூர் அருகே விநாயகபுரம் கிராமத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த தனபாக்கியம் என்ற 90 வயது மூதாட்டி முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பணம் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனபாக்கியம் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகளும் அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயும் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கொலை சம்பவம் குறித்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments