உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து... 15க்கும் அதிகமான பயணிகள் காயம்

0 547

உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட தொடர் விபத்துகளால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து மோதிய வேகத்தில் டேங்கர் லாரி சாலையின் மீடியனை தாண்டி, எதிர்புறத்திற்கு சென்றது. அப்போது, எதிர்திசையில் வந்த மினி லாரி மீது டேங்கர் லாரி மோதியது.

விபத்தில் சிக்கிய மினி லாரியின் பின்னால் வந்த தனியார் சொகுசு பேருந்து அதன் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் சடன் பிரேக் அடித்து, இடதுபுறமாக திரும்பியபோது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 2 பேருந்துகள், 2 லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு பேருந்துகளில் வந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments