போற போக்க பார்த்தா காலிங் பெல் அடிச்சி களவு செய்வாய்ங்க போல..! கொள்ளைக்காரப் பயலோடு மல்லுக்கட்டு

0 894

தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன் , நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த அன்வர் பஃக் என்பவர் கீழவாசல் டாஸ்மாக் கடை அருகில் உள்ள படிமா சந்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று , வீட்டு வாசலில் தனியாக நின்று செல்போனில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவன் அவரது கையில் இருந்த செல்ஃபோனை பறித்தான்

கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், அவரது சட்டைப் பையில் இருந்த 5000 ரூபாய் பணத்தையும் வழிப்பறி செய்து கொண்டு ஓட முயன்றான்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொள்ளையனிடம் மல்லு கட்டினார். அன்வரின் ஆடையையும் உருவி வீசிய நிலையில் கொள்ளையனின் பனியனை பிடித்து மடக்க முயன்றார்

இருந்தபோதிலும்,கொள்ளையன் அன்வர் பஃக்கிடம், பனியனை கழட்டி விட்டு , தயாராக நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடினான்

கடைசி வரை கொள்ளையனிடம் மல்லு கட்டி நகையை பறி கொடுக்காமல் இருக்க முயற்சித்தும் கொள்ளையன் நகையை பறித்துச் சென்ற காட்சி அப்பகுதியின் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments