குடும்பத் தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மருமகனும் தற்கொலை..

0 945

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு  கொன்றுவிட்டு மருமகனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

எல்லப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமிக்கும், படியூரில் ஹாலோ பிளாக் கம்பெனி நடத்தி வந்த அவரது மருமகன் ராஜ்குமாருக்கும் கடந்த 6 வருடங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காரில் எல்லப்பாளையம் கிராமத்திற்கு சென்ற ராஜ்குமார், அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த பழனிசாமியை 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகவல் தெரிவித்துவிட்டு தன்னைத்தானே நெற்றியில் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்த வகையைச் சேர்ந்தது..? உரிமம் பெறப்பட்டதா..? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments