வாஷிங்மெஷினில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட சிறுவன் சடலம் மீட்பு.. சிறுவனை கொன்று வாஷிங் மெஷினில் அடைத்ததாக பக்கத்து வீட்டு பெண் கைது

0 916

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி வாஷிங்மெஷினில் அடைத்து வைத்தாக பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்துக்குறிச்சி சேர்ந்த விக்னேஷ் இன்று காலை தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, உடன் வந்த அவரது மகன் சஞ்சய் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த விக்னேஷ், பக்கத்து வீட்டில் வசித்த தங்கம் என்பவருக்கும் தங்களது குடும்பத்திற்கும் இடையே தகராறு இருப்பதால் அவர் குழந்தையை கடத்தி வைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்த வாஷிங்மெஷினில் சஞ்சயை சடலமாக மீட்டு, தப்பிக்க முயன்ற தங்கத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் கொலை செய்யப்பட்ட பிறகு வாஷிங்மெஷினில் அடைத்து வைக்கப்பட்டாரா, அல்லது மூட்டையில் கட்டி வாஷிங்மெஷினில் அடைக்கப்பட்டதால் உயிரிழந்தாரா என்றும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments