மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறும் தமிழகம்.. காவல்துறை தடுக்க தவறிவிட்டது - அன்புமணி குற்றச்சாட்டு

0 536

உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் போன்றவற்றின் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.மக. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 12 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதன் அளவு 2022-ல் 66 கிலோவாகவும், 2023-ல் 81 கிலோவாகவும் அதிகரித்திருப்பதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 10 சதவீதம் கூட தமிழக காவல்துறை பறிமுதல் செய்யவில்லை எனவும், 90 சதவீதத்திற்கும் மேல் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவினர் தான் பறிமுதல் செய்துள்ளனர் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments