கள்ளக்குறிச்சியில் வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி தேர் சாய்ந்ததில் 3 பேர் காயம்

0 658

சங்கராபுரம் அருகே சோழபுரம் கிராமத்தில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற கோயில் தேரோட்டத்தில் தேர் நிலைதடுமாறி சாய்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

மகாமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில், சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தேர் சாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் என்பவர் சேலம் அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

பக்கவாட்டில் சாய்ந்த தேர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments