மகாவிஷ்ணு நிகழ்ச்சி - பள்ளி மேலாண்மை குழு மறுப்பு..!

0 610

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை தலைவர் மகாவிஷ்ணு சொற்பொழிவு  நிகழ்ச்சியை பள்ளி மேலாண்மை குழு தான் ஏற்படுத்திக் கொடுத்ததாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அந்தக் குழுவினர் மறுத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா, இந்த நிகழ்ச்சிக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.  இந்த மாதிரியான நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments