உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை.. பூட்டை உடைத்து சிலையை மீட்ட போலீசார்..!

0 379

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உரிய அனுமதியின்றி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த வேளகாபுரம் ஊராட்சியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் அகற்றினர்.

சிலை வைக்க அனுமதி கோரி இரு தரப்பினர் விண்ணப்பித்தாகவும், ஒரு தரப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபட முயன்ற போது, சிலையை அகற்றச் சென்ற போலீசாருக்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரை கண்டதும் பிள்ளையார் சிலை வைத்து இருந்த அறையின் கதவிற்கு பூட்டு போட்டு சாவியை தர மறுத்ததால், பூட்டை உடைத்து சிலையை மீட்ட போலீசார் அதை சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றி பத்திரமாக காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments