நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் துவக்கக் கூடாது - தயாரிப்பாளர்கள் சங்கம்..!

0 610

  புதிய படங்களை துவக்கக் கூடாது என்றும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழுவினருக்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவினருக்கும் இடையேயான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையேயான பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் இரு சங்கங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments