வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா... பெரிய தேர் பவனியை ஒட்டி குவிந்த பக்தர்கள்

0 551

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பேராலய முகப்பு, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார், சூசைப்பர், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களை கோவாவில் இருந்து வந்த கொங்கணி இன பெண்கள் சுமந்து செல்வது விழாவின் கூடுதல் சிறப்பாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments