பைக் மெக்கானிக் மீது 2 இளைஞர்கள் சரமாரித் தாக்குதல் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

0 534

திருவள்ளூர் மாவட்டம், சதுரங்கப்பேட்டை பகுதியில் பைக் மெக்கானிக் மோகன்தாஸ் என்பவரை இரண்டு இளைஞர்கள் கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாகத் தாக்கியது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதையில் பைக்கை தள்ளிக் கொண்டு  வந்த ரூபன், தங்கதுரை ஆகியோர் தங்களது பைக்கில் உள்ள பழுதை உடனே சரி செய்யவேண்டும் எனக் கூறியபோது மோகன் தாஸ், தற்போது வேறொரு  பைக்கை பழுது பார்ப்பதாகவும் 10 நிமிடத்தில் அதனை முடித்துவிட்டு அவர்களது பைக்கை சரி செய்வதாகவும் கூறிய நிலையில்,ஏற்பட்ட வாக்குவாதத்தில்  ஆத்திரமடைந்த இளைஞர்கள் மோகன் தாஸை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments