பெண் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம்.. டீ குடித்துக் கொண்டிருந்தவருக்கு அரிவாள் வெட்டு..!

0 475

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகரன் என்பவரை, முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுக்கும், குணசேகரனுக்கும் இடையேயான தொடர்பை ஆலங்குடியைச் சேர்ந்த சிவா என்பவர் 5 மாதங்களுக்கு முன்பு தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. சிவா வெளிநாடு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டினருக்கு குணசேகரன் மிரட்டல் விடுத்ததாகவும், சிவா ஊருக்கு திரும்பிய நிலையில், அதற்கு பழிவாங்கவே நண்பர்களுடன் சென்று குணசேகரனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments