ஊராட்சி மன்றத் தலைவர் தகுதி நீக்கம் - திருவள்ளூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை..!

0 590

ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியதாகவும்,அரசு மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசனை தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்களில் 6 பேர் வெங்கடசனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில் புகார் நிரூபணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments