திண்டுக்கல்லில் பட்டா மாற்றம் செய்ய ரூ.7,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர், பெண் உதவியாளரும் கைது

0 464

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கண்ணு மேய்க்கிபட்டியைச் சேர்ந்த சரண்யாவிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கரிகாலி சர்வேயர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார்.

கரிகாலி கிராமத்தில் உள்ள பூர்விக நிலத்தை உட்பிரிவு செய்து, தந்தை பெயரில் பட்டா மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்த சரண்யாவிடம் பாரதிதாசன் லஞ்சம் கேட்க, அவர் பணத்துடன் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்றுள்ளார்.

தான் வெளியில் உள்ளதால், பணத்தை உதவியாளர் சுதாவிடம் கொடுக்கும்படி பாரதிதாசன் கூறியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய சுதாவையும், பாரதிதாசனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments