பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

0 613

பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் ஒற்றையர் SU5 பிரிவில் இந்தியா சார்பாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனுஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பேட்மிட்டன் ஒற்றையர் SH6 பிரிவில் ஓசூரைச் சேர்ந்த நித்தியா ஸ்ரீ சிவன் வெண்கலம் பதக்கம் வென்றார். தாயகம் திரும்பிய இந்த மூன்று வீராங்கனைகளும் சென்னை வந்தடைந்தபோது, அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments