இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் மாயம்

0 367

மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்தாலியை நெருங்கியபோது சேதமடைந்து கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த 7 பேர் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.

ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்காக மத்திய தரைக்கடலை கடக்கும்போது கடந்தாண்டு 2,500 பேர் கடலில் மூழ்கி இறந்ததாகவும், நடப்பாண்டில் இதுவரை ஆயிரத்து 47 பேர் இறந்ததாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments