ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு மாணவர்களே வெடிகுண்டு மிரட்டல்... பெற்றோரை அழைத்து போலீசார் எச்சரிக்கை

0 397

ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளித்து 6 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தி சோதனையில் அது புரளி என்று தெரியவந்தது. விடுமுறைக்காக மிரட்டல் விடுத்த 9ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments