சுழற்சி முறையில் இயங்கியதை முழு நேர கல்லூரியாக மாற்றியதற்கு எதிர்ப்பு.. அரசுக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் போராட்டம்..!

0 533
சுழற்சி முறையில் இயங்கியதை முழு நேர கல்லூரியாக மாற்றியதற்கு எதிர்ப்பு.. அரசுக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் போராட்டம்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் சுழற்சி முறையை மாற்றி முழு நேரம் இயங்கும் முறையை அமல்படுத்தியதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வரை கண்டித்து விரிவுரையாளர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் கல்லூரிக்கு வருவதால் போதிய இடவசதி, கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாக விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்து கொண்டு கல்லூரிக்கு வருவதாகவும், முழு நேர கல்லூரியாக மாற்றப்பட்டதால் வேலைக்கு செல்வதில் சிரமம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments