கடன் தவணை கட்டாத பெண் குறித்து அவதூறு பரப்பிய IDFC வங்கி.. கண்ணீர் மல்க வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்..!

0 729
கடன் தவணை கட்டாத பெண் குறித்து அவதூறு பரப்பிய IDFC வங்கி.. கண்ணீர் மல்க வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்..!

சென்னை அயப்பாக்கத்தில் காருக்கான தவணை கட்டாத பெண் குறித்து அவர் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் வங்கி ஊழியர்கள் அவதூறு பரப்பியதாகக் கூறி அந்த பெண் வங்கிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வரும் அனிதா கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா சாலையில் உள்ள IDFC வங்கியில் 7 லட்சம் ரூபாய் கடன் பெற்று கார் வாங்கியுள்ளார். முறையாக தவணை செலுத்தி வந்த நிலையில் விபத்தில் கால் பாதிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. 2 லட்சத்து 70 ஆயிரம் பாக்கி உள்ள நிலையில், அனிதா 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக அவரது செல்ஃபோன் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களிடமும் வங்கி ஊழியர்கள் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

அனிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட காரை திரும்ப ஒப்படைத்த வங்கி நிர்வாகம், இதுகுறித்து விளக்கம் அளிக்க மறுத்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments