திருவண்ணாமலையில் தனியார் கல்லூரி பேருந்தின் பின்னால் மோதிய அரசுப் பேருந்து... விபத்தில் 8 பேர் காயம்

0 394

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் தனியார் கல்லூரி பேருந்தும் அரசுப் பேருந்தும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில்,  சூடாமணி கிராமம் அருகே மாணவிகளை இறக்கிவிடுவதற்காக கல்லூரி பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.

இதனை எதிர்பாராத அரசுப் பேருந்து ஓட்டுநர், கல்லூரி பேருந்தின் பின்னால் மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. 8  பேர் காயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments