பைக் மீது மோதிய ஜீப்.. தந்தையின் கண் முன்னே மகன் உயிரிழப்பு - தப்பிய ஓடிய டிரைவர்..!

0 489

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே பைக் மீது ஜீப் மோதிய விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை படுகாயமடைந்தார்.

பெருஞ்சாணி பகுதியை சேர்ந்த வினு என்பவர் தனது மகன் ஆகாஷுடன் வேர்கிளம்பி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக சென்ற ஜீப் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனையடி பகுதியில் ஜீப்பை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments