தெலங்கானாவில் காரில் தரைப்பாலத்தை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தந்தை, மகள் உயிரிழப்பு

0 717

தெலங்கானா மாநிலத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆக்கேடு ஓடை வெள்ளத்தில் மூழ்கியிருந்த காரில் தந்தை, மகளின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

கம்மம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்லால், மகள் அஸ்வினியுடன் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து காரில் ஐதராபாத் விமான நிலையத்திற்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை முதல் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஆக்கேடு ஓடையில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும்போது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments