மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள், உள்ளூர் வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம்

0 415

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை கட்டணமில்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்த சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் அப்பகுதிவாசிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஜூலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுங்கச்சாவடியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து, கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்று கூறி சுங்கச்சாவடி பணியாளர்கள் , வழக்கம் போல் கட்டணம் வசூலிப்பதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments