திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து நெரிசல்

0 390

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ்நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 பேருந்துகளும் அவற்றின் பின்னால் ஒரு லாரியும் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின.

இப்பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், முதலில் சென்ற தனியார் பேருந்து திடீரென வேகத்தைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதன் பின்னால் ஆம்னி பேருந்து ஒன்றும் அதன் பின்னால் அரசுப் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாயின.

சில விநாடிகளிலேயே இந்த மூன்று பேருந்துகளின் பின்னால் லாரி ஒன்று மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 15 பேர் காயமடைந்தனர். விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments