மது அருந்தும்போது தகராறு.. கல்லால் தாக்கிய கும்பல்.. முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் உயிரிழப்பு..!

0 430

மன்னர்குடி அருகே 3 பேர் கொண்டு கும்பல் கல்லால் தாக்கியதில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் உயிரிழந்தார். காகிதப் பட்டறையைச் சேர்ந்த  முன்னாள் அதிமுக கவுன்சிலர் சத்யாவின் மகன் ஜெயநாராயணன் நேற்றிரவு  மது அருந்தும்போது அங்குள்ளவர்களுடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு தனது நண்பர்கள் 4பேருடன் நடந்து சென்ற போது, பைக்கில்  வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியதுடன் கல்லைத் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஜெயநாராயணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments