ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடித்து 52 வயது நபர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி

0 368

செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் அருகே வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டை 52 வயது நபர் ஒருவர் உடைக்க முயன்றபோது, வெடித்து சிதறி படுகாயம் அடைந்தார்.

அனுமந்தபுரம் ராணுவ துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில், ராக்கெட் லாஞ்சர்களை அருகில் உள்ள மலை மீது சுட்டு பயிற்சி மேற்கொள்வதை ராணுவத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு சுடப்பட்டு வெடிக்காத குண்டுகளை உடைத்து அதில் உள்ள இரும்பு, பித்தளை பாகங்களை அப்பகுதி மக்கள் விற்றுவருவதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை, கோதண்டன் என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டை உடைக்க முயன்றபோது அது வெடித்து அவர் படுகாயமடைந்ததாகவும், அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments