செவிலியர் மாணவிக்கு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வழக்குப்பதிவான நிலையில் அரசு மருத்துவர் தலைமறைவு

0 464

வேலூர் மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவரைத் தேடி வருகின்றனர்.

குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் எலும்பு சிகிச்சைப்பிரிவு டாக்டர் பாபு, காட்பாடியைச் சேர்ந்த 2ம் ஆண்டு செவிலியர் பயிற்சி மாணவியிடம் மருத்துவமனையில் உள்ள அறையில் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மாணவியின் புகாரின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் மருத்துவர் பாபு மீது நான்கு சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments