நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஃபார்முலா-4 கார் பந்தயப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த காவல் உதவி ஆணையர் - முதலமைச்சர் இரங்கல்
பணியில் இருந்தபோது உயிரிழந்த சென்னை திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகுமாரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகே ஃபார்முலா-4 கார் பந்தயப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிவகுமார், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
Comments