நெடுஞ்சாலையை ஒட்டி தடுப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு பேரிகார்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள்..!

0 381

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புலியூரில் நெடுஞ்சாலையை ஒட்டி, ஏரிக்கரையில் தடுப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு பேரிகார்டுகள் மற்றும் எச்சரிக்கை பலகையை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஏரியின் வளைவில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு இரும்பு பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது. அதில், ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இரவு நேரத்தில் சுமார் 20 அடி நீளமுள்ள பேரிகார்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments