ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பிராட்வே பேருந்து முனையம் அமைக்க அரசாணை..!

0 420

சென்னை பிராட்வே பகுதியில், 822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகள் அடங்கிய வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 2 அடுக்கு பேஸ்மெண்ட் என்றும், 2 அடுக்குகளில் பேருந்து நிறுத்தம் செயல்படும் என்றும், 6 அடுக்குகளில் வணிக வளாகம் என மொத்தம் 10 அடுக்குகளை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

1100 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படும் இந்த பேருந்து முனையத்தில் 470 கார்கள், 800 பைக்குகள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments