மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய இளைஞர்.. விபத்து ஏற்பட்டதால் பதிறிப்போன நீலகிரி..!

0 416

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கரியசோலை பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வழக்கம்போல நேற்று இரவு கூடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து  கடைசி பேருந்தாக வந்த அரசுப் பேருந்து  கரியசோலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.அதிகாலை நேரத்தில் பயணிப்பவர்களின் வசதிக்காக  அங்கு  நிறுத்தப்பட்ட  பேருந்தை வாளவயல் பகுதியைச்  சேர்ந்த ரிஷால் என்பவர் மதுபோதையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். 

அப்போது அங்குள்ள பாலம் அருகே  விபத்து  ஏற்பட்டதால்  பேருந்தை அங்கேயே  நிறுத்திச் சென்றதாகக்  கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments