விழுப்புரத்தில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என தீர்ப்பு

0 305

விழுப்புரம் மாவட்டத்தில், வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நன்நாடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனுஷ், சுரேஷ், வெங்கடேஷ் ஆகியோர் இரும்புக் குழாயால் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விழுப்புரம் தாலுகா போலீசார் பதிவு செய்த வழக்கில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜசிம்மவர்மன் தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments