7-ஆம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியர் அடித்ததாக புகார்.. உதடு, கையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

0 338

வேலூர் சத்துவாச்சாரி டி.ஏ.வி. பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோர் கூறிய புகார் தொடர்பாக  மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

சக மாணவர்களுடன் சண்டையிட்டதாகக் கூறி அந்த மாணவரை தலைமை ஆசிரியர் சீனிவாசன் அடித்ததில் உதடு, கை, கால்கள் வீங்கியதாக தெரிவித்த பெற்றோர், முதலுதவி அளிக்காமல் மாணவனின் முகத்தில் மாஸ்க் அணிவித்து பள்ளியிலேயே மாலை வரை அமர வைத்திருந்ததாகவும் கூறினர்.

காயமுற்றதாக கூறப்படும் மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  புகார் பற்றி தலைமை ஆசிரியர் அளிக்கும் விளக்கத்தை அறிந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments