ஈரோட்டில் பேருந்துகளில் பொருத்திய ரூ.50,000 மதிப்பிலான ஏர் ஹாரன்கள் பறிமுதல்

0 312

ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஏர் ஹாரன்களை பொருத்தி இருந்த 20 தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்தனர்.

பவானி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  அரசு பேருந்துகளிலும் பொருத்தி இருந்த ஏர் ஹாரன்களை கண்டறிந்து பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments