பாலியல் அத்துமீறல் புகார் - தீவிர விசாரணை... நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை

0 494

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கேரளாவின் சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் மலையாள திரைத்துறையைச் சேர்ந்த மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் அத்துமீறல் புகாரில் பிரபல நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வுமான முகேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்து வருகின்றனர். தம்மை கைது செய்வதற்கு தடைகோரி முகேஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், 5 நாட்கள் அவரை கைது செய்ய எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments