கிருஷ்ணகிரியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கும் அரசுப் பேருந்து... சீர்படுத்த பயணிகள் கோரிக்கை

0 242

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கிவரும் அரசு பேருந்தை சீர்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை பல்வேறு கிராமங்கள் வழியே நாள்தோறும் இயக்கப்படும் அப்பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயணிப்பதாக கூறப்படுகிறது.

அப்பேருந்தின் படிக்கட்டு ஒரு வார காலமாக உடைந்த நிலையில் சாலையில் உரசியபடி உள்ளதால் சிரமத்திற்குள்ளாவதாக பயணிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments