மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை

0 792

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த அம்மன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டட வசதியின்றி மாணவர்கள் வராண்டாவிலும் மரத்தடியிலும் அமர்ந்து படிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டடம் கட்டுவதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பே பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த அவர்கள், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments