"வேளாண் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும்" கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0 287

வேளாண் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறி, கலெக்டர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்ட அரங்கிலேயே ஒன்று கூடி கோஷமிட்டனர்.

விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஆட்சியர், வட்டியில்லாமல் வழங்கப்படும் வேளாண் கடனை உரிய நேரத்தில் செலுத்தத் தவறினால், வங்கிகள் உரிய விதிப்படி வட்டி வசூலிக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments