மசாஜ் சென்டரில் கத்தியை காட்டி பணம், நகை கொள்ளை.. சிசிடிவி காட்சி வைத்து 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்

0 346

சென்னை கே.கே நகரில் அனுமதி இன்றி இயங்கி வந்த மசாஜ் சென்டரில் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களிடம் பணம், நகை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

முகக்கவசம் அணிந்தபடி நடத்தப்பட்ட இக்கொள்ளை வழக்கில், போலீஸ் இன்பார்மராக இருந்த ராஜீ மூளையாக செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து திருவெற்றியூரை சேர்ந்த ஜெயசீலன், நொச்சி குப்பத்தை சேர்ந்த பழனிசாமி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான ராஜீ உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments