கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே நாட்டு கால்பந்து வீரர் உயிரிழப்பு

0 369

கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே நாட்டு கால்பந்து வீரர் வான் இஸ்கியார்டோ, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

27 வயதான வான் இஸ்கியார்டோ, கடந்த வியாழக்கிழமை பிரேசிலில் நடைபெற்ற கிளப்-களுக்கு இடையிலான கால்பந்து போட்டியின்போது மைதானத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

சீரற்ற இதய துடிப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இஸ்கியார்டோ சிகிச்சை பலனின்றி இறந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments