திருவள்ளூரில் மாமுல் கேட்டது குறித்து போலீஸில் புகாரளித்த காய்கறி கடை ஊழியருக்கு கத்திக் குத்து

0 646

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மாமுல் தர மறுத்து போலீஸில் புகார் அளித்த காய்கறிக் கடை பணியாளரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடிவருகின்றனர்.

ஏனாதிமேல்பாக்கத்தில் உள்ள காய்கறி கடைக்குள் நேற்று முன்தினம் புகுந்த வெட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்த கும்பல் மாமூல் கேட்டு அங்கிருந்த பணியாளர் இளவரசன் என்பவரை மிரட்டியதாகவும், இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் காய்கறிக்கடைக்குள் நுழைந்த கும்பல் இளவரசனின் வயிற்றில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments