மகணை சிறையிலிருந்து மீட்க கோரி தாயின் ஆட்கொணர்வு மனு... மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 398

சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை பெற்று,16 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை, மீட்க கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரதன் பாண்டுரங்கன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்த போது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவரது தாய் சரோஜா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் எப்படி  உத்தரவிட முடியும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments