குஜராத்தில் தொடர் கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய வாகனங்கள்

0 429

குஜராத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வடோதரா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடோதராவின் அகோடாவில் உள்ள குடிசைப் பகுதி வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் ஏராளமான வாகனங்கள் மூழ்கியுள்ளன.

மோர்பி உள்ளிட்ட பல இடங்களில் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்குப் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments