சென்னையில் பிரபல நடிகையின் கார் ஏறியதில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் உயிரிழப்பு

0 746

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

வீதியில் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த மஞ்சன் என்பவர் மீது அந்த வழியாகச் சென்ற கார் ஏறியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

இதையடுத்து கார் ஓட்டுநரான பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் அடையாறில் உள்ள நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில் தான் இந்த கார் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments