கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்திலேயே அரசு பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்..!

0 340

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடியில் கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

பள்ளி துவங்கும் முன்பு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் அமர்ந்திருந்த போது திடீரென சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்ததில் அவர்களின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments