கடலூரில் மிதமிஞ்சிய போதையால் ஏற்பட்ட விபத்து... அப்பாவி ஆசிரியருக்கு நேர்ந்த சம்பவம்

0 622

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சிவக்குமார் என்பவர் மிதமிஞ்சிய மதுபோதையில் ஓட்டிய கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி, கடை ஒன்றின் ஷட்டரில் இடித்து நின்றது.

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சிவக்குமாரின் கார், எதிர்திசையில் வந்த ஸ்கூட்டி மீது மோதியதில், தனியார் பள்ளி ஆசிரியை ஜீவா தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

காரிலிருந்து மீட்டபோது போதையில் தள்ளாடியபடி வந்த 50 வயதான சிவக்குமாரை, போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

என் வாழ்நாளிலேயே இதுபோன்ற ஒரு தவறை நான் செய்யவில்லை, என்னை எப்படியாவது என் வீட்டிற்கு கொண்டு சேர்த்துவிடுங்கள் என்று மதுபோதையில் சிவக்குமார் புலம்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments