நாகை மீனவர்களை தாக்கி 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துச்சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

0 229

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

படகு இன்ஜின், ஜி.பி.எஸ், வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களையும் அவர்கள் பறித்துச்சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காயங்களுடன், கூடுதலாக வைத்திருந்த இன்ஜினுடன் கரை திரும்பிய மீனவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments