கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்

0 740

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணர் வேடம்பூண்ட சிறுவன் பாடிய பக்தி பாடலை முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கேட்டு மகிழ்ந்தார்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மத்திய பிரதேசம் போபால் நகரில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான், பக்தி பாடல்கள் பாடினார்.

டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. இதில் கிருஷ்ணர் பக்தி பாடல்களை பாடகர்கள் பாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments