மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்ற மினி லாரி.. வண்டியை நிறுத்தி ஓட்டுநரிடம் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம்..!

0 231

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பாதையில் மற்ற வாகனங்களுக்கு வழி விடாத லாரியை மறித்து சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொல்லிமலை சோளக்காட்டியில் இருந்து மினிலாரி ஒன்று மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல்  சென்றதாக கூறப்படுகிறது.

38 வது கொண்டை ஊசி வளைவு அருகே வரும்போது மினி லாரியை நிறுத்திய சுற்றுலா பயணிகள், ஏன் இவ்வாறு லாரியை இயக்குகிறாய் என கேட்டு ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மிரட்டும் விதமாக பேசியதாக கூறி லாரி கிளினரை ஒருவர் அடிக்கப் பாய்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments